மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன பொன்விழா ஆண்டு மதுரை மடிசியா அரங்கில் நடைபெற்று வருகிறது, இதில் ஏராளமான செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்…
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விஜய் அங்கிள் என விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு,
சூரியனைப் பார்த்து நாய் குலைக்கும் , அதற்காக சூரியன் நாய் மேல் கோபப்படுவதில்லை, அது நாய் என்று தெரியும் அதை பெருசாக எடுக்கத் தேவையில்லை, உலகத்திற்கே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறது. அந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் – என்று சந்திரகுமார் கடுமையாக விமர்சித்தார்.