அரசின் பல்வேறு துறைகள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
விருதுநகர் முத்துசாமி தெருவில் உள்ள தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. முகாமினை நகர் மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மின்சாரத்துறை சுகாதாரத்துறை வருவாய்த்துறை காவல்துறை மின்சார துறை சமூக நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூட்டுறவு துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.