Kutralam Five Falls
குற்றாலத்தில் அமைந்துள்ள அருவிகளில், ‘ஐந்தருவி’ (Five Falls) தனித்துவமான அழகைக் கொண்டது. இங்கு ஒரே அருவியானது, மலைப்பாறைகளின் மீது ஐந்து தனித்தனி கிளைகளாகப் பிரிந்து வழிவதால் இப்பெயர் பெற்றது. பார்ப்பதற்கு, ஐந்து தலை நாகமான ஆதிசேஷனைப் போன்று தோற்றமளிப்பதாகக் கூறுவர்.










