இந்தியத் திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் தேசியக் கொடியேற்றி வைத்துச் சிறப்பித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் TVK கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
தேசியக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் தங்களது கரங்களால் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர்.
- Virudhunagar
விருதுநகர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தின விழா
விருதுநகர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா
