• Home  
  • புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி இல்லை
- Madurai

புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி இல்லை

புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி இல்லை – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டு

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி மற்றும் அரசியலமைப்புச் சமூகத்துவக் கோட்பாடு பின்பற்றப்படவில்லை என வன்மையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:

பிரதிநிதித்துவமின்மை: வழக்கறிஞர்களில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 8 பேரில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

சமூகப் பங்கீடு: மூன்று சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நீதிபதிகளில் சுமார் 20 சதவீதம் பேர் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்பாதுரையின் பெயர் பரிசீலனைப் பட்டியலில் இருந்தும் இறுதிப் பட்டியலில் தவிர்க்கப்பட்டுள்ளது.

கொலீஜியம் மீது சந்தேகம்: நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் அமைப்பு முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதுடன், அது பாரபட்சம் காட்டும் அமைப்பாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்குக் கேள்வி: சமூகநீதியை வலியுறுத்தும் அரசியல் கட்சிகளும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இss விவகாரத்தில் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்குமா?

சட்டப்பேரவைத் தீர்மானம்: அனைத்து சமூகத்தினருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதி செய்யத் தமிழக அரசு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.