மதுரை ஊமச்சிகுளம் அருகே சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி முத்துச்செல்வியின் பிறந்தநாள் விழா, 80 வகை சீர்வரிசை மற்றும் ரூ.2 லட்சம் பண மாலையுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் அவரது ஐந்தாவது மகள் தனலட்சுமி, தாயின் 80 வயதைக் குறிக்கும் வகையில் 8 பவுன் தங்கம், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட 80 வகையான சீர்வரிசைத் தட்டுகளை ஊர்வலமாகக் கொண்டுவந்து அசத்தினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களுக்கு 28 வகையான அறுசுவை விருந்துடன் நடைபெற்ற இம்மாபெரும் விழாவைக் கண்டு தாயார் முத்துச்செல்வி உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார்.
- Madurai
80-வது பிறந்தநாளில் 80 வகை சீர்வரிசை & பண மாலை
80-வது பிறந்தநாளில் 80 வகை சீர்வரிசை & பண மாலை – வெளிநாட்டு மகள் செய்த நெகிழ்ச்சியான ஏற்பாடு
