உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கக் கோரி திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தடையின்றி தரிசனம் செய்ய இந்த விடுமுறை அவசியமானது என்றும், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு விரைந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இம்மாபெரும் விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்றும் ஆதீனம் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
- Madurai
மதுரை கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை கோரி மனு
மதுரை கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை கோரி மனு
