Tuesday, 15 September 2026

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்க வலியுறுத்தல்
- Madurai

சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்க வலியுறுத்தல்

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை -: திருச்சி சிவா வலியுறுத்தல்

மதுரையில் காலமான பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடலுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவருக்குத் தமிழக அரசு முழு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள மறைந்த சாலமன் பாப்பையா அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பட்டிமன்ற உலகிற்கு ஒரு ராஜபாட்டையை அமைத்துக் கொடுத்தவர் சாலமன் பாப்பையா எனக் குறிப்பிட்ட அவர், சிலரது மறைவு ஒரு மொழியின் இழப்பாகவே பார்க்கப்படுகிறது என்றார். மேலும், அவர் தனது இல்லத்துக் குழந்தைகளை மட்டுமல்லாமல் உலகத்துக் குழந்தைகள் அனைவரையும் நல்வழிப்படுத்தியவர் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதை செலுத்தும் பாரம்பரியத்தைத் தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய திருச்சி சிவா, தமிழ்த்தொண்டாற்றிய சாலமன் பாப்பையா அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தினார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.