விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கிய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார்.
அதிமுகவும் திமுகவும் ஒரே கூட்டணியில் இணைந்து பாஜகவுடன் சேர்ந்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் யாருடன் சேர்ந்தாலும் எந்தத் தேர்தலிலும் எங்களை நெருங்க முடியாது எனத் தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். குடும்பத்திற்குச் சொந்தமான அறக்கட்டளையைச் சின்னச் சின்ன ஈகோ மற்றும் யோகாவால் முடக்கிவிட்டதாக அவரது குடும்பத்தினரே தங்களைச் சந்தித்துக் குற்றம் சாட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதுகுறித்துச் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விவரங்களை முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றும், அடுத்த வாரம் பயணம் உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திங்கள்கிழமை முதலமைச்சர் பதிலுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி நேரம் வைத்தால் சபை நடவடிக்கை இரவு 9 மணி வரை நீளும் என்பதால் அன்றைய தினம் கேள்வி நேரம் இல்லை எனவும் விளக்கமளித்தார்.
- Madurai
அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி – திமுக, அதிமுக இணைய வாய்ப்பு
அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி:- திமுக, அதிமுக ஒரே கூட்டணியில் இணைய வாய்ப்பு
