மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய அவர், பனையூர் நோக்கி மாற்றுக் கட்சியினர் படையெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் வருவார் என்றும், அப்பகுதியில் நிரந்தரத் தீயணைப்பு நிலையம் அமைக்கச் சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவினர் பாஜகவுடன் கள்ளக்கூட்டு வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், உதயநிதி ஸ்டாலின் விவகாரம் குறித்துக் கடுமையாக விமர்சித்தார். இதே நிலை தொடர்ந்தால் திமுக அதலபாதாளத்திற்குச் செல்லும் என்றும் முஸ்தபா எச்சரித்தார்.
- Madurai
எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர் சந்திப்பு
எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர் சந்திப்பு
