விருதுநகர் - சிவகாசி சாலையில் தனியார் நர்சிங் கல்லூரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில், முந்திச் செல்ல முயன்ற கார் எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது.
இடப்பற்றாக்குறையால் காருக்குள் சிக்கித் தவித்த மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சபரிநாதன் (21) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆமத்தூர் போலீசார், லாரி ஓட்டுநரான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமியிடம் (44) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
சிவகாசி சாலையில் நேருக்கு நேர் கார் மோதல்
சிவகாசி சாலையில் நேருக்கு நேர் கார் மோதல்
