• Home  
  • உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
- Dindigul

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, குடும்ப நலன் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்கள் குடும்ப நலன் குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திண்டுக்கல்லில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, குடும்ப நலன் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்கள் குடும்ப நலன் குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கையில் பதாகைகளை ஏந்தியபடி சென்ற மாணவர்கள், ‘திட்டமிட்ட குடும்பம்’, ‘திருமணத்திற்கு முறையான வயது’, ‘குழந்தைகளுக்கு இடையே இடைவெளி’ மற்றும் ‘சரியான வயதில் முதல் குழந்தை’ ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்தப் பேரணியானது, திண்டுக்கல் பேருந்து நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சிலை மற்றும் பெரிய கடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மக்களைச் சென்றடைந்தது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்ற மாணவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.