விருதுநகர் அல்லம்பட்டியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீராம் தியேட்டர் அருகில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கட்சியின் பிரமுகர் பரணி மாரிமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி கண் திறந்த காமராஜரின் வழியைப் பின்பற்றும் விதமாக, அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்குத் தங்கள் புகழஞ்சலியைச் செலுத்தினர்.
