• Home  
  • உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
- Virudhunagar

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு அறிவித்துள்ள ‘உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’-ஐ உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் மற்றும் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில இணை செயலாளர்கள் குணசீலி மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, மாநில தென்னை விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன் மற்றும் ஏராளமான தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், துணை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.