ஆடி வெள்ளியை முன்னிட்டு, உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவில் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கு, பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்து ஆறடி உயர பிரம்மாண்ட அருவாளைச் சாதித்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், நடிகர் மதுரை முத்து கருப்பண சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து பிரம்மாண்டமான அருவாளைச் சாட்டினார். அதனைத் தொடர்ந்து, அங்கு வருகை தந்திருந்த பக்தர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சுவையான அசைவ விருந்து படைத்து தனது நேர்த்திக்கடனைச் சிறப்பாக நிறைவேற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- Madurai
கருப்பண சுவாமிக்கு அருவாள் சாற்றிய நடிகர்
கருப்பண சுவாமிக்கு அருவாள் சாற்றிய நடிகர் மதுரை முத்து – பக்தர்களுக்கு அசைவ விருந்து
