மதுரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், ஆகம விதிமுறைகளின்படி வருஷாபிஷேக விழா மற்றும் 108 கலசாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ மதனகோபால சுவாமி, ஸ்ரீ ருக்மிணி மற்றும் ஸ்ரீ சத்யபாமா தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், வேத பாராயணம் மற்றும் 108 கலசப் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கோயில் முழுவதும் வேத கோஷங்களும் பக்தி முழக்கங்களும் எதிரொலிக்க, திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து மகா தீபாராதனையைப் பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.
- Madurai
ஸ்ரீ மதனகோபால சுவாமி வருஷாபிஷேகம்
ஸ்ரீ மதனகோபால சுவாமி வருஷாபிஷேகம்
