இந்தியாவின் முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டன் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் இந்து நாடார்கள் செந்திக்குமார நாடார் கல்லூரி மற்றும் விருதுநகர் ஹாக்கி பெடரேஷன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளைத் துணைத் தலைவர் வெங்கடேஷ் தொடங்கி வைக்க, பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி அணிகள் லீக் முறையில் உற்சாகமாகப் பங்கேற்று விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில், ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதல் பரிசினைத் தட்டிச் சென்றது. அதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாவது பரிசையும், விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாவது பரிசையும் வென்று சாதனை படைத்தன.
நிறைவு விழாவில் ஹாக்கி பெடரேஷன் உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்க, வெற்றி பெற்ற அணிகளுக்குக் கல்லூரி உதவித்தலைவர் வெங்கடேஷ் மற்றும் பொருளாளர் கண்ணன் ஆகியோர் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர். உடற்கல்வி இயக்குநர் முருகேசன் நன்றியுரை கூறினார்.
- Virudhunagar
செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள்
செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள்
