விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கிவரும் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவ-மாணவிகளுக்குக் காதுகேட்கும் கருவிகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
இப்பள்ளியில் பயிலும் 55 செவித்திறன் குறையுடைய குழந்தைகளின் வகுப்பறைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்பித்தல் முறைகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில், பள்ளியில் பயிலும் 10 மாணவ-மாணவிகளுக்கு விலைமதிப்பற்ற இலவசக் காதுகேட்கும் கருவிகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார்.
குழந்தைகளுடன் அமர்ந்து இனிப்புகளைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், "உங்களுக்கு எந்தத் தேவைகள் இருந்தாலும் தயக்கமின்றி என்னிடம் தெரிவிக்கலாம்; அரசு எப்போதும் உங்கள் உடன் இருக்கும்" என அவர்களுக்கு நம்பிக்கையளித்தார். இந்நிகழ்வில் குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் அவர் நெகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- Virudhunagar
செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் ஆய்வு
சிவகாசியில் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு
