பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்துச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் திரண்ட தி.மு.க.வினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் கழகத்தின் முக்கியப் பிரமுகருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகர்மன்றத் தலைவர் மாதவன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, நகர செயலாளர் தனபாலன் மற்றும் ஏராளமான நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணாவின் புகழைப் போற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
- Virudhunagar
அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
விருதுநகரில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
