• Home  
  • விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி
- Madurai

விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி

தமிழக அரசு பொறுப்பேற்று 75 நாட்கள் கடந்த நிலையிலும், மாநிலத்தின் பல்வேறு முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு பொறுப்பேற்று 75 நாட்கள் கடந்த நிலையிலும், மாநிலத்தின் பல்வேறு முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம், மின்வெட்டு, லாக்கப் மரணங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் போன்ற பிரச்சனைகளில் அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் மூலம் மக்களைக் கவர்ந்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இதனை மத்திய அரசும், உளவுத்துறையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார். போக்குவரத்து நெரிசல் மற்றும் காவல் துறையின் பணிகள் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. (CBI) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தகவல்தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் என்ற முறையில், இத்தகைய போலி பிரச்சாரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.